» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

சங்கரன்கோவிலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. பணம் மற்றும் நகைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே தனியார் கட்டிடத்தின் மாடியில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று காலை 7 மணியளவில் வங்கியின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்டு பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் வங்கியில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. எனினும், பணம் மற்றும் நகைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. விடுமுறை நாள் என்பதால் வங்கியில் ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதி விபத்து - 21 பேர் படுகாயம்!
ஞாயிறு 31, மே 2026 10:26:11 AM (IST)

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சனி 30, மே 2026 5:23:02 PM (IST)

திருமண விழாவில் புகுந்து 6 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - முகமூடி கும்பல் வெறிச்செயல்!
சனி 30, மே 2026 8:52:51 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை!
வெள்ளி 29, மே 2026 5:48:30 PM (IST)

குற்றாலம் அருவியில் குளிக்க கட்டணம் ரத்து : வனத்துறை அறிவிப்பு
வெள்ளி 29, மே 2026 12:25:12 PM (IST)

7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
வியாழன் 28, மே 2026 9:28:37 AM (IST)


