» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

சங்கரன்கோவிலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. பணம் மற்றும் நகைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே தனியார் கட்டிடத்தின் மாடியில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று காலை 7 மணியளவில் வங்கியின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்டு பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் வங்கியில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. எனினும், பணம் மற்றும் நகைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. விடுமுறை நாள் என்பதால் வங்கியில் ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் சுகுமார் ஆய்வு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:31:21 PM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:01:46 PM (IST)

நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:42:53 PM (IST)

பாளையங்கோட்டையில் ரூ.5.06 கோடியில் மரபணு ஆய்வகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 14, பிப்ரவரி 2026 12:18:28 PM (IST)

ரயில்வே பெண் ஊழியரைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை!
சனி 14, பிப்ரவரி 2026 8:25:03 AM (IST)

