» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பிப்ரவரி 23 முதல் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், தேசிய விட்டமின் ஏ சத்துக் குறைபாடு நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வரும் 23.02.2026 முதல் 28.02.2026 வரை இந்த முகாம் நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள சுமார் 1,07,537 குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.
குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கு இந்த நுண்சத்து இன்றியமையாதது. கண் ஆரோக்கியம்: கண் குருடு ஏற்படாமல் தடுக்க இது அவசியம். குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளைத் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த திரவத்தால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது.
அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 முதல் 11 மாத குழந்தைகளுக்கு 1 மில்லி, 12 முதல் 60 மாத குழந்தைகளுக்கு 2 மில்லி. அளவில் திரவம் வழங்கப்படும், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கிப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமலி பள்ளி ஆசிரியை இனிகோவுக்கு வெற்றி விழா
புதன் 3, ஜூன் 2026 8:55:24 AM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி : ஜூன் 4ஆம் தேதி தொடங்குகிறது
செவ்வாய் 2, ஜூன் 2026 10:32:11 AM (IST)

ஆலங்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்!
செவ்வாய் 2, ஜூன் 2026 10:10:13 AM (IST)

தூத்துக்குடியில் பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு: 2 வாலிபர்கள் கைது!
செவ்வாய் 2, ஜூன் 2026 8:47:49 AM (IST)

இளம் பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: விஷம் கொடுத்து தூக்கிலிட்டு கொன்ற தாய், தந்தை கைது!
செவ்வாய் 2, ஜூன் 2026 8:32:18 AM (IST)

பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு: 10,265 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்!
திங்கள் 1, ஜூன் 2026 4:42:59 PM (IST)


