» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் : நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சியர் ஆய்வு
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:43:19 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.02.2026) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 32 வகையான திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மற்றும் ஜல் ஜீவன் (உயிர்நீர் இயக்கம்) திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், பயிர் காப்பீடு திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. சீர்மிகு நகர திட்டம் (Smart City), தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் அம்ரூத் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மின்விநியோக கழகம் (ஜோதி யோஜனா), பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது.
மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் மக்கள் நலன் கருதி விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அரசு அலுவலர்கள் மக்களின் தேவைகளை அறிந்து, கோரிக்கைகளைப் பரிசீலித்து, திட்டங்கள் முழுமையாகப் பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமலி பள்ளி ஆசிரியை இனிகோவுக்கு வெற்றி விழா
புதன் 3, ஜூன் 2026 8:55:24 AM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி : ஜூன் 4ஆம் தேதி தொடங்குகிறது
செவ்வாய் 2, ஜூன் 2026 10:32:11 AM (IST)

ஆலங்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்!
செவ்வாய் 2, ஜூன் 2026 10:10:13 AM (IST)

தூத்துக்குடியில் பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு: 2 வாலிபர்கள் கைது!
செவ்வாய் 2, ஜூன் 2026 8:47:49 AM (IST)

இளம் பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: விஷம் கொடுத்து தூக்கிலிட்டு கொன்ற தாய், தந்தை கைது!
செவ்வாய் 2, ஜூன் 2026 8:32:18 AM (IST)

பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு: 10,265 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்!
திங்கள் 1, ஜூன் 2026 4:42:59 PM (IST)


