» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மகளிருக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மற்றும் கடனுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 5:38:53 PM (IST)

திருநெல்வேலியில் நபார்டு வங்கியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மகளிருக்கு ஆட்டோக்களை மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட நபார்டு வங்கியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மகளிர் தங்களது வாழ்வாதாரத்தைச் சுயமாக மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மகளிருக்கு முதற்கட்டமாக ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் 7 மகளிருக்கு, வங்கி மூலம் 90 சதவீத கடனுதவியுடன் கூடிய ஆட்டோக்கள் இன்று வழங்கப்பட்டன. புதிய வாகனங்களுக்கான சாவிகளை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட நபார்டு வங்கியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மகளிர் தங்களது வாழ்வாதாரத்தைச் சுயமாக மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மகளிருக்கு முதற்கட்டமாக ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் 7 மகளிருக்கு, வங்கி மூலம் 90 சதவீத கடனுதவியுடன் கூடிய ஆட்டோக்கள் இன்று வழங்கப்பட்டன. புதிய வாகனங்களுக்கான சாவிகளை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
விவசாயிகளுக்கான சரக்கு வாகனம்
இதனைத் தொடர்ந்து, நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் கலந்தை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, ரூ. 7 இலட்சம் மானியத்துடன் கூடிய சிறிய சரக்கு வாகனம் வழங்கப்பட்டது. இந்த வாகனத்தின் சேவையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கிப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
சனி 6, ஜூன் 2026 10:30:58 AM (IST)

தாமிரபரணி நதியைக் காக்கத் தீவிர நடவடிக்கை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் உறுதி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:34:53 PM (IST)

பெண் குழந்தையை சாக்குப்பையில் போட்டுத் துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர் கைது!
வெள்ளி 5, ஜூன் 2026 12:45:29 PM (IST)

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக திருநாவுக்கரசு நியமனம்
வெள்ளி 5, ஜூன் 2026 8:45:07 AM (IST)

அரசு பேருந்து - பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: மாணவர்கள் உட்பட 10பேர் படுகாயம்!
வியாழன் 4, ஜூன் 2026 5:56:09 PM (IST)

நெல்லையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 12:26:10 PM (IST)


