» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:42:34 PM (IST)
கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு, வடக்கன்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், வள்ளியூரைச் சேர்ந்த சுடலை கண்ணன் (45) என்பவர் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவில், சுடலை கண்ணன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் மோசஸ் ஜெபசிங், குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நேற்று அதிரடி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சிறப்பாகப் புலன் விசாரணை செய்து, நீதிமன்றத்தில் சாட்சிகளை ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத் தந்ததற்காக வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், அப்போதைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் (தற்போது திருப்பூர் டி.எஸ்.பி.), வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், தலைமை காவலர் பரமசிவன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆலன் ராயன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் பாராட்டியுள்ளார்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் உரிய சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தொடர்ந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்குநேரி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:17:33 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)

நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 5:43:08 PM (IST)

முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்: ஆட்சியர் உறுதி!
புதன் 22, ஜூலை 2026 5:11:44 PM (IST)


