» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தந்தை கொலையில் குற்றவாளிகள் பிடிபடாததால் விரக்தி: மகள் தற்கொலை!
திங்கள் 23, மார்ச் 2026 12:34:43 PM (IST)
நெல்லை அருகே விவசாயி கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளைக் காவல்துறை கைது செய்யாததால் மனமுடைந்த அவரது மகள், உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை அருகே நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (52), கடந்த 17-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் 6 நாட்களாகியும் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படாததால், அவரது மகள் பேபி கனி (24) கடும் மன உளைச்சலில் இருந்தார்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராகப் பணியாற்றி வந்த அவர், "அப்பாவின் பிரிவைத் தாங்க முடியவில்லை, கொலையாளிகளும் இன்னும் பிடிபடவில்லை" என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தத் துயரச் சம்பவத்தைக் கண்டித்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தந்தை மற்றும் மகள் என அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)

அங்கன்வாடி வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி: பெண் கைது - இளம்பெண் தற்கொலை முயற்சி!
வெள்ளி 8, மே 2026 8:22:20 AM (IST)

பழைய குற்றாலத்தில் ரூ.20 நுழைவு கட்டணம் : காலை 7 முதல் மாலை 5 வரை மட்டுமே அனுமதி!
வியாழன் 7, மே 2026 10:35:05 AM (IST)


