» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அனிதா ராதாகிருஷ்ணன் மீது கருப்பு மை வீசிப் போராட்டம் : காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எச்சரிக்கை!
திங்கள் 18, மே 2026 3:34:44 PM (IST)
ராகுல் காந்தியை தரக்குறைவாகப் பேசி வரும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கருப்பு மை வீசிப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வடக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி பேசியதாவது: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அடைந்த படுதோல்வியின் காரணமாக, திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் முற்றிலும் தனது அரசியல் நிதானத்தை இழந்து, விரக்தியான நிலையில் பொது மேடைகளில் கொச்சையாகப் பேசி வருகிறார்.காங்கிரஸ் கட்சியினரை அவர் 'துரோகிகள்' என்று நா கூசாமல் விமர்சிக்கிறார். ஆனால், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலம் தொட்டே, மத்தியில் பதவிகளையும் சுகங்களையும் அனுபவித்துவிட்டு, காங்கிரஸ் பேரியக்கத்திற்குத் தி.மு.க. செய்த துரோகங்கள் என்னென்ன என்பது இந்த ஊருக்கே நன்றாகத் தெரியும். இத்தகைய தி.மு.க.வின் தரம் தாழ்ந்த கொச்சைப் பேச்சுகளும், தலைவர்களின் அகங்காரமுமே தற்பொழுது அந்த இயக்கம் தமிழகத்தில் முழுமையாக அழிந்து போவதற்குக் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
கடந்த தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரைத் திட்டமிட்டுத் தோற்கடிப்பதற்காக, அ.தி.மு.க.வினருடன் கைகோர்த்துக்கொண்டு உள்ளடி வேலைகளில் ஈடுபட்டார். கடந்த காலங்களில் தங்களுக்குத் தேவை ஏற்படும்போதெல்லாம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை டெல்லிக்குத் தூது அனுப்பி, காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி நின்றது இதே தி.மு.க.தான் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
தென் மாநிலங்கள் முழுவதும் தற்பொழுது காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சிகள் மிக கம்பீரமாக அமைந்து வருகின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலும் இன்று காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இத்தகைய சூழலில், 'தலைவர் ராகுல் காந்தியின் முகத்தில் கரியைப் பூசுவோம்' என்று அனிதா ராதாகிருஷ்ணன் பொது மேடையில் ஆபாசமாக முழங்கியுள்ளார்.
எங்கள் உலகளாவிய தலைவர் ராகுல் காந்தியைப் பற்றித் தரக்குறைவாகப் பேச அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எவ்விதத் தகுதியும் இல்லை. இதோடு அவர் தனது கொச்சைத்தனமான பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் அவர் எல்லையை மீறிப் பேசினால், அவர் தூத்துக்குடி மாவட்டத்தின் எந்தப் பகுதிக்கு வந்தாலும், காங்கிரஸ் தொண்டர்களைத் திரட்டி அவர் மீது 'கருப்பு மை' வீசிப் போராட்டங்களை நடத்துவோம்" என எச்சரித்தார். இந்த நேரடி அரசியல் மோதல் தூத்துக்குடி மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)



thalaivargal katchiமே 18, 2026 - 04:31:09 PM | Posted IP 172.7*****