» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் - மாவட்டத்தில் 450 மருந்தகங்கள் மூடல்!
புதன் 20, மே 2026 11:36:50 AM (IST)

ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் இன்று மாவட்டம் முழுவதும் மருந்தகங்கள் பெருமளவில் மூடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைனில் முறையற்ற முறையில் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். புற்றுநோய், இதய நோய் போன்ற உயிர்காக்கும் மருந்துகளைத் தரமற்ற முறையில், காலாவதியான மருந்துகளை விற்று மக்கள் உயிரோடு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 450 மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகர எல்லைக்குட்பட்ட பிரதான வணிகப் பகுதிகளில் உள்ள மற்றும் மருத்துவமனைகளின் அருகாமையில் அமைந்துள்ள சுமார் 150 மருந்து கடைகள் தங்களது விற்பனையை முற்றிலுமாக நிறுத்திப் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளன.
கோவில்பட்டி, சாத்தான்குளம், திருச்செந்தூர், விளாத்திகுளம், உடன்குடி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பிற உள்கட்டமைப்பு வட்டாரங்களிலும் மீதமுள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால், வணிகர்கள் சங்கத்தின் இந்த அறப்போராட்டம் மாவட்டத்தில் 100% முழு வெற்றியடைந்துள்ளது என மாவட்டத் தலைவர் ஜான்பிரிட்டோ மற்றும் செயலாளர் முனுசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)



ஆமாமே 20, 2026 - 04:50:40 PM | Posted IP 172.7*****