» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : கள்ளக்காதலனுடன் தாய் கைது!
ஞாயிறு 24, மே 2026 8:46:25 PM (IST)
நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கள்ளக்காதலனுடன் தாய் கைது செய்யப்பட்டார்.
நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24), டிரைவர். இவருக்கும் பாளையங்கோட்டையில் ஒரு பகுதியை சேர்ந்த திருமணமான 42 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பெண்ணுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதில் மகள் உள்ளார்.
மணிகண்டனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்ற மணிகண்டன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசம் அனுபவித்து வந்தார்.
இதுதவிர மாணவியின் கண்முன்னே அவர்கள் 2 பேரும் தனிமையில் இருந்துள்ளனர். மணிகண்டன் அடிக்கடி அந்த பெண்ணின் 14 வயது மகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்தார். தாய் கண் முன்னே மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்ைல ெகாடுத்ததாக கூறப்படுகிறது. அதை மாணவியின் தாய் தட்டிக்கேட்கவில்லை.
இதுகுறித்து மாணவி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவி, தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை மற்றும் தாயின் கள்ளக்காதல் விவகாரம் ஆகியவை குறித்து போலீசாரிடம் கூறினார். இதுதொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மாணவியின் தாய், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)


