» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.4.51 கோடி ஓய்வூதிய நிதி மோசடி: அதிகாரிகள் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு!
புதன் 17, ஜூன் 2026 7:22:55 AM (IST)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில்இறந்த 27 ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கு விபரங்களை மென்பொருளில் மாற்றி அமைத்து, சுமார் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் ஓய்வூதிய நிதியை மோசடி செய்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட 7 பேர் மீது மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவினர் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தின் ஓய்வூதிய நிதியில் (Pension Fund) மிகப்பெரிய அளவில் பண மோசடி மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் துறைமுக கணக்கு மற்றும் தரவுப் பிரிவுகளில் தீவிர விசாரணை நடத்தினர். இந்த ரகசிய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின.
துறைமுக ஆணையத்தின் ஓய்வூதியர் பிரிவில் ஒப்பந்த (அவுட்சோர்சிங்) முறையில் பணியாற்றி வரும் ஊழியர்களான கிஷோர் பாபு மற்றும் மணிகண்டன் பிரபு ஆகிய இருவரும், அங்குள்ள உயர் அதிகாரிகளின் துணையோடு இந்த மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் வ.உ.சி. துறைமுகத்தில் பணிபுரிந்து இறந்துபோன ஓய்வூதியதாரர்கள் 27 பேரின் பட்டியலை கம்ப்யூட்டரில் எடுத்து, அவர்களின் அசல் வங்கி கணக்கு எண்களை நீக்கியுள்ளனர். அதற்குப் பதிலாகத் தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் வங்கி கணக்கு எண்களை கம்ப்யூட்டர் தரவுகளில் (Data) மாற்றி அமைத்துள்ளனர். இதன் மூலம், இறந்தவர்களின் ஓய்வூதியத் தொகை முழுவதும் இவர்களால் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட கணக்குகளுக்குத் தொடர்ந்து மாற்றப்பட்டு வந்துள்ளது. இவ்வாறாகக் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து சுருட்டியிருப்பது தணிக்கை மற்றும் சி.பி.ஐ. விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உள்குரூப் முறைகேட்டிற்குத் துறைமுகத்தின் முக்கிய அதிகாரிகள் கோப்புகளைச் சரிபார்க்காமல் ஒப்புதல் அளித்து உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து, முறைகேட்டிற்குத் துணைபோன துறைமுக முதுநிலை கணக்கு அதிகாரி அனுராதா, கணக்கு அலுவலர் (நிலை-2) பழனி குமாரசுவாமி, மின்னணு தரவு செயலாக்க அலுவலர் ரோஜர்ஸ் ஜோசப் துரைராஜா, மின்னணு தரவு செயலாக்கத்துறை உதவி இயக்குனர் காளியப்பன், முதுநிலை உதவியாளர் சந்தனசங்கர் ஆகிய 5 அதிகாரிகள் மற்றும் அவுட்சோர்சிங் ஊழியர்கள் மணிகண்டன் பிரபு, கிஷோர் பாபு ஆகிய 2 பேர் என மொத்தம் 7 பேர் மீதும் கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மதுரை சி.பி.ஐ. போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு நிறுவனமான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் அரங்கேறியுள்ள இந்த பல கோடி ரூபாய் நிதி மோசடிச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்திலும், மத்திய அரசு வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
பணியாளர்Jun 17, 2026 - 05:01:11 PM | Posted IP 172.7*****
வேற ஒன்னும் இல்லை, திமுக ஆளாக இருப்பான்.
TechnicianJun 17, 2026 - 08:18:04 AM | Posted IP 172.7*****
அந்த திருட்டு அதிகாரிகள் பெயரை வெளியிடுங்கள்
அப்பாவிJun 17, 2026 - 08:16:45 AM | Posted IP 162.1*****
அங்கேயும் பிச்சைக்கார மெகா திருட்டு பயலுக, காலெண்டர் கூட கொடுக்கமாட்டார்கள், படித்த நிறைய பேருக்கு வேலையும் கொடுக்கமாட்டார்கள்.
மேலும் தொடரும் செய்திகள்

அரசாணைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்: தென்காசி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 5:16:31 PM (IST)

மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளம் தூர் வாரும் பணி துவக்கம்: விவசாயிகள் பெருமகிழ்ச்சி!!
வெள்ளி 19, ஜூன் 2026 3:43:39 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் மறுதேர்வு: கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 11:41:46 AM (IST)

நெல்லை எக்ஸ்பிரஸை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு : ஆட்டோ ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 5:54:36 PM (IST)

மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 8:27:23 AM (IST)

ஹெலிகாப்டரில் வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்கள்: 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 7:53:47 AM (IST)



SriiiJun 19, 2026 - 04:49:25 AM | Posted IP 172.7*****