» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவியை கல்லால் தாக்கிய கணவர் கைது : மது குடிப்பதற்கு பணம் தராததால் வெறிச்செயல்!

வெள்ளி 19, ஜூன் 2026 12:06:11 PM (IST)

தூத்துக்குடியில் மது குடிப்பதற்குப் பணம் தராத ஆத்திரத்தில் மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அடுத்த இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (38). இவர் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்குச் செல்லம்மாள் என்ற ஜெயந்தி (35) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

மது பழக்கத்திற்குப் பயங்கரமாக அடிமையான மணிகண்டன், வேலைக்குச் சரியாகச் செல்லாமல் மது குடிப்பதற்காகத் தனது மனைவி ஜெயந்தியிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்து, வீட்டில் அடிதடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று இரவும் மணிகண்டன் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ஜெயந்தி பணம் தர மறுத்ததால் வீட்டின் அருகே கிடந்த பெரிய கல்லை எடுத்து ஜெயந்தியின் தலையில் பலமாக அடித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். 

இதில் பலத்த காயம் அடைந்து அலறிய ஜெயந்தியின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் தாளமுத்து நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory