» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி ஐடிஐ-களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 19, ஜூன் 2026 4:22:18 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூன் 30 வரை நேரடிச் சேர்க்கை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி (கோரம்பள்ளம்), வேப்பலோடை, திருச்செந்தூர், உமறுப்புலவர் நாகலாபுரம் மற்றும் ஏரல் ஆகிய 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்குத் தகுதியான மாணவர்கள் நேரடியாகச் சென்று சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம். மாநிலம் முழுவதும் உள்ள சேர்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் (Trades) குறித்த விபரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம்.கல்வித்தகுதியும் விண்ணப்பக் கட்டணமும்:
இச்சேர்க்கைக்கு 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2021-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும். நேரடிச் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயை அட்மிஷனின் போது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ (UPI - Gpay, PhonePe) வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
தேவையான அசல் சான்றிதழ்கள்:
நேரடிச் சேர்க்கைக்கு விரும்பும் மாணவர்கள் தங்களின் 8 அல்லது 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (TC), சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றின் அசல் (Original) மற்றும் ஒரு செட் நகல்களுடன் (Xerox) மேலே குறிப்பிட்ட ஐடிஐ மையங்களை நேரில் அணுக வேண்டும்.
தொடர்பு எண்கள்: தூத்துக்குடி (9499055810), வேப்பலோடை (9499055814), திருச்செந்தூர் (9499055812), நாகலாபுரம் (04638-242687), ஏரல் (7418165115).
அரசு வழங்கும் சலுகைகள்:
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்குத் தமிழக அரசு சார்பில் பல்வேறு விலையில்லா நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி:
மாதந்தோறும் வருகை நாட்களுக்கு ஏற்ப 750 ரூபாய் உதவித்தொகை.
3 வேளையும் இலவச உணவு மற்றும் தங்குவதற்கான உறைவிட வசதி.
விலையில்லா லேப்டாப் (மடிக்கணினி), மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள்.
கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை (Bus Pass).
தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்குத் தமிழக அரசின் 'புதுமைப் பெண் திட்டம்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்' கீழ் மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் உயர்கல்வி உதவித்தொகை.
மாணவர்களின் எதிர்காலத்தை வளர்க்கும் இந்த அரிய வாய்ப்பினைத் தகுதியுள்ள உள்ளூர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசாணைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்: தென்காசி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 5:16:31 PM (IST)

மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளம் தூர் வாரும் பணி துவக்கம்: விவசாயிகள் பெருமகிழ்ச்சி!!
வெள்ளி 19, ஜூன் 2026 3:43:39 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் மறுதேர்வு: கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 11:41:46 AM (IST)

நெல்லை எக்ஸ்பிரஸை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு : ஆட்டோ ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 5:54:36 PM (IST)

மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 8:27:23 AM (IST)

ஹெலிகாப்டரில் வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்கள்: 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 7:53:47 AM (IST)


