» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் சூறாவளிக் காற்றுக்கு அரசமரம் சாய்ந்தது: பொதுமக்கள் உயிர் தப்பினர்!
திங்கள் 29, ஜூன் 2026 3:12:41 PM (IST)

தூத்துக்குடி தமிழ்ச்சாலையில் இன்று வீசிய சூறாவளிக் காற்று காரணமாகப் பழமைவாய்ந்த அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இச்சம்பவத்தின் போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், இன்று வீசிய சூறாவளிக் காற்று காரணமாக தமிழ்ச்சாலையில் உள்ள சத்யா ஏஜென்சிஸ் அருகில் பழமையான அரசமரம் சாய்ந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமான பொலிரோ ஜீப் வாகனத்தின் மீது மரம் விழுந்ததில், அந்த வாகனம் நசுங்கி ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
மரம் விழுந்ததால் அப்பகுதியில் தற்காலிகமாகப் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், விழுந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் உதவியுடன் மரத்தை முழுமையாக அகற்றிப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாட்டி-பேரன் இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 7:56:10 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 29, ஜூன் 2026 4:06:11 PM (IST)

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு: போட்டித் தேர்வு பயிற்சி மையத்திற்குச் சென்றபோது சோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:46:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திங்கள் 29, ஜூன் 2026 8:25:45 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)
_1782541937.jpg)
தமிழகத்தின் 6 தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண்கிறது நாதக: அம்பையில் சீமான் போட்டி!
சனி 27, ஜூன் 2026 12:02:22 PM (IST)


