» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நள்ளிரவில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!
திங்கள் 29, ஜூன் 2026 4:26:44 PM (IST)
தூத்துக்குடியில் நள்ளிரவில் கார் மற்றும் சரக்கு வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (46). இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் தனது கார் மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அந்த வழியே குடிபோதையில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், முத்துக்குமாரின் கார் மற்றும் குட்டியானை வாகனத்தின் கண்ணாடிகளை திடீரென அடித்து உடைத்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பியோடினர்.
வாகனங்கள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு வெளியே வருவதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாட்டி-பேரன் இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 7:56:10 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 29, ஜூன் 2026 4:06:11 PM (IST)

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு: போட்டித் தேர்வு பயிற்சி மையத்திற்குச் சென்றபோது சோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:46:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திங்கள் 29, ஜூன் 2026 8:25:45 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)
_1782541937.jpg)
தமிழகத்தின் 6 தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண்கிறது நாதக: அம்பையில் சீமான் போட்டி!
சனி 27, ஜூன் 2026 12:02:22 PM (IST)


