» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள்: மேயர் வழங்கினார்!
சனி 18, ஜூலை 2026 10:11:15 AM (IST)

தூத்துக்குடியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட திருவள்ளுவர்புரம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு வீடுகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. இதனால் வீட்டிலிருந்த துணிகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் நாசமாகின.
உடைமைகளை இழந்து தவித்த 7 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து முறையிட்டு, உதவி கோரினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மேயர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
அதன்பொருட்டு, பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்களுக்கும் தலா ஒரு வீட்டிற்குத் தேவையான பீரோ, கட்டில், சீலிங் ஃபேன், கேஸ் அடுப்பு மற்றும் தண்ணீர்த் தொட்டி உள்ளிட்ட 5 லட்ச ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமி தனது சொந்தச் செலவில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் நேரில் வழங்கினார்.
இந்நிகழ்வில் மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், லூர்தம்மாள்புரம் பங்குத்தந்தை செல்வன், மாநகர மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெனிபர் ராபர்ட், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் எமல்டன், வட்டப்பிரதிநிதி கிளமெண்ட், நிர்வாகிகள் வேணி சந்தானம், தெய்வேந்திரன், அருள்ராஜ், தினேஷ், ஸ்நோசன், ஜெஸ்வந்த், கோகுல், சந்தனகுமார், ஜெப்சன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)



MANITHANJul 18, 2026 - 10:37:38 AM | Posted IP 104.2*****