» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி பொருட்காட்சி மைதானத்தில் மோதல் : தவெகவினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு!
திங்கள் 20, ஜூலை 2026 8:34:32 AM (IST)
.png)
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாப் பொருட்காட்சி மைதானத்தில் நாற்காலி, விளக்குகளை அடித்து நொறுக்கித் தகராறில் ஈடுபட்ட தவெகவினர் 10 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வரும் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்தின் அருகே உள்ள மைதானத்தில் பொருட்காட்சிக்கான பந்தல் மற்றும் கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சனிக்கிழமை இரவு பொருட்காட்சி அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த தவெகவைச் சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் திடீரெனத் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள், டியூப் லைட்டுகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
பொருட்காட்சி ஏற்பாட்டாளர் டென்சிங் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் பேரில், தவெகவைச் சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று தவெக தரப்பிலும் தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவிழா தொடங்கவுள்ள நிலையில் இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)



BalaJul 20, 2026 - 09:02:22 AM | Posted IP 104.2*****