» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வ.உ.சி கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:45:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழச்சியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள வ.உ.சி கல்லூரியில் 'மை பாரத்' தூத்துக்குடி கிளையின் சார்பாக, போதைப் பொருளற்ற மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மேயர் ஜெகன் பெரியசாமி, போதைப்பழக்கத்திற்கு எதிராக மாணவ-மாணவியருடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் வ.உ.சி கல்லூரியின் பொறுப்பு முதல்வர் வள்ளியம்மாள், சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம், மை பாரத் மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஞானசந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆரோக்கிய செல்வ சுந்தரி, கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)



கோமாளிAug 1, 2026 - 02:31:13 PM | Posted IP 172.7*****