» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தவெக பொதுக்கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:48:13 PM (IST)

தூத்துக்குடியில் அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற தவெக பொதுக்கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் பலர் நேரில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்டக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தவெக மத்திய மாவட்டச் செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
பொதுவாக அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் போன்ற களப்பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காகக் கலந்துகொள்வது மட்டுமே நடைமுறையாக இருந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த எந்தவொரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்திலும் அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதில்லை.
இந்நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற தவெக பொதுக்கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் பலர் நேரில் கலந்துகொண்டது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மின்வாரிய நகர மற்றும் ஊரகப் பகுதி செயற்பொறியாளர்கள் தங்களுக்கு அரசு ஒதுக்கிய அதிகாரப்பூர்வ கார்களில் அமர்ந்திருந்ததும், ஒருசில அதிகாரிகள் மேடையின் முன்புறம் நின்று கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக மின்வாரிய உயர் அதிகாரிகள் இப்படிப் பட்டவர்த்தனமாகப் பங்கேற்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)


