» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அமைச்சர் நிர்மல் குமார் அநாகரிக பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
சனி 1, ஆகஸ்ட் 2026 8:27:07 PM (IST)
பொறுப்பின் கண்ணியம் மறந்து அநாகரிகமாகப் பேசி வரும் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்குத் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிதாகப் பொறுப்பிற்கு வந்த தவெக அரசின் மின்சாரம் மற்றும் சட்டத்துறையின் அமைச்சர் நிர்மல் குமார், அறத்திற்குப் புறம்பாக தொடர்ந்து அநாகரிகமான முறையில் பேசி வருகிறார்.தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்திட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் மேற்கொண்ட திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பாதுகாப்புக்கான நடைபயணத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.
அதேபோல், மக்களால் தேர்வு செய்யப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் பணியாற்றிய என்னைப் பற்றியும், கீதா ஜீவன் பற்றியும் அவதூறாகவும் அநாகரிகமாகவும் உரையாற்றியுள்ளார். தனது சொந்தத் துறையான மின்சாரத் துறையில் ஏராளமான குளறுபடிகள் தினந்தோறும் ஏற்படுகிறது. மின்வெட்டு தொடர் கதையாக இருந்து வருகிறது. இப்போது மின்கட்டண கணக்கீட்டில் பெரும் தவறுகள் நடந்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள விவரத்தின்படி சுமார் 3.70 லட்சம் குடும்பங்கள் மின்கட்டண கணக்கீட்டு குளறுபடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் அளித்துள்ளனர். சுமார் 50 முதல் 75 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த குளறுபடியான கணக்கீடு முறையே இதற்குக் காரணமாகும்.
தனது சொந்தத் துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வக்கற்ற திறனற்ற அமைச்சர், 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் சேவை செய்து வரும் முன்னாள் அமைச்சர்களை மோசமான முறையில் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனது அநாகரிக பேச்சை அமைச்சர் நிர்மல் குமார் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)


