» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)



போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையாக, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோட்ட வருவாய்த்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இன்று தொடங்கி வைத்தார்.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் வாலிபால் போட்டியினைத் தொடங்கி வைத்தார். அதற்கு முன்பாக அவரது தலைமையில் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். 

இப்போட்டிகள் ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 14 வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளன. அண்ணா விளையாட்டரங்கத்தில், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, சிலம்பம், 100மீ, 400மீ, 800மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், பிரான்சிஸ் பொறியியல் கல்லூரி (உள்விளையாட்டரங்கம்): செஸ், கேரம், டேபிள் டென்னிஸ் மற்றும் த்ரோபால் போட்டிகளும் நடைபெறும்.

மாணவர்களிடையே போதைப் பழக்கத்தைக் குறைத்து, விளையாட்டுப் போட்டிகளில் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இத்தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் மோ. பிரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், பாளையங்கோட்டை வட்டாட்சியர் மாரி ராஜா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory