» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தொகுதி மறுவரையறை மசோதாவைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன பேரணி!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:37:41 PM (IST)

congressrallyxtut.jpg

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவைக் கண்டித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பேரணி இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் எஸ். எம். சகாயராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது.மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இப்போராட்டத்தில் மண்டலத் தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மேற்கு மண்டலப் பொறுப்பாளர் ஜான் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் மாவட்டத் துணைத் தலைவர்கள் மடத்தூர் தனபால் ராஜ், பாலகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், டேவிட் வசந்தகுமார், பி.ஜே.சி. சுரேஷ், நாகேந்திரன், ராஜாராம், மாவட்டப் பொதுச்செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், புல்டன் ஜெயின், ரஞ்சிதம் ஜெபராஜ், ஆண்ட்ரூ ஜாப்ரின் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இக்னேசியஸ், காமாட்சி தனபாலன், கதிர்வேல் மாரியப்பன், ஜோனாதன், அசன் பாத், வழக்கறிஞர் சகாயராஜ் உட்படத் திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

balaAug 12, 2026 - 09:58:14 AM | Posted IP 162.1*****

ippodan mulichu irukanunga....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory