» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 2-வது ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணக் கோரி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் அதிமுக முன்னாள் பெருநகரக் கழகச் செயலாளர் எஸ். ஏசாதுரை கோரிக்கை மனு அளித்தார்.
தூத்துக்குடி மையப்பகுதியில் உள்ள 2-வது ரயில்வே கேட் ஒரு நாளைக்குச் சுமார் 46 முறை மூடப்படுகிறது. இதனால் பள்ளிச் செல்லும் மாணவர்கள், வணிகர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 'ஷண்டிங்' என்ற பெயரில் 1-வது கேட்டிலிருந்து வரும் ரயில் பாதி தூரம் வரை மட்டுமே வந்து செல்கிறது. இருப்பினும் 2-வது கேட்டும் சேர்த்து அடைக்கப்படுகிறது.
1-வது மற்றும் 2-வது ரயில்வே கேட் ஆகிய இரண்டிற்கும் ஒரே சிக்னல் முறை செயல்பாட்டில் இருப்பதே இதற்குக் காரணமாகும். எனவே, இந்த அமைப்பை மாற்றி 2-வது கேட்டிற்குத் தனித்தனியாகச் சிக்னல் முறை அமைத்து, பொதுமக்கள் பாதிக்காத வகையில் ஒன்றிய ரயில்வே நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி அளிக்கப்பட்ட இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி, இப் பிரச்சனை தொடர்பாகத் தான் ஏற்கனவே ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் பேசியிருப்பதாகவும், விரைவில் இதற்குச் சரியான தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)



கந்தசாமிAug 17, 2026 - 11:31:19 AM | Posted IP 104.2*****