» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் கொலை வழக்கில் லாரி டிரைவர் கைது : பரபரப்பு வாக்குமூலம்!!

செவ்வாய் 19, மார்ச் 2024 4:55:08 PM (IST)

தூத்துக்குடியில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்ச நீர் காயல் பகுதியை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா. இவரது மனைவி கனகா(31). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தெற்கு மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது 3 குழந்தைகளுடன் கனகா மஞ்சள் நீர் காயலில் வசித்து வந்தபடி தூத்துக்குடியில் தூய்மை பணியாளராக வேலைக்கு சென்று வந்தார். 

இந்நிலையில் இன்று காலை கனகா வழக்கம்போல் வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டார். தொடர்ந்து தனியார் பஸ்சில் மஞ்சநீர்காயலில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கனகா, தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஒருவர் கனகாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த கொலை தொடர்பாக பசுவந்தனை கிழக்கு தெருவைச் சேர்ந்த ராமன் மகன் முனியசாமி (42) என்பவரை போலீசார்  கைது செய்துள்ளனர். முனியசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவருக்கு கனகாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கனகாவின் குழந்தைகளை முனியசாமிதான் பராமரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாராம். ஆனால் முனியசாமி அதனை ஏற்க மறுத்து விட்டாராம். இதனால் கனகா முனியசாமியின் தொடர்பை துண்டித்து விட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த முனியசாமி அவரை வெட்டிக் கொலை செய்து விட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


மக்கள் கருத்து

SaamyMar 20, 2024 - 01:37:25 PM | Posted IP 162.1*****

Wait for your turn

உருப்படாத வழக்கறிஞர்கள்Mar 19, 2024 - 10:07:45 PM | Posted IP 172.7*****

முதல்ல VAO கொலை குற்றவாளிகளை தூக்குத் தண்டனை கொடுத்தால் அடுத்த கொலை நடக்க வாய்ப்பு இருக்காது. இப்போ இந்த குற்றவாளிகளை தூக்குத்தண்டனை கொடுங்கள் அடுத்த கொலைகள் நடக்க வாய்ப்பு இருக்காது.

SivasriMar 19, 2024 - 07:04:56 PM | Posted IP 162.1*****

இன்னொருவர் மனைவி கொலை செய்வதற்கு என்ன rights இருக்கு.யார்ஊர் தெரியாத பெண்ணிடம் பழக்கம் வைத்து அவள் குழந்தைகளை தனியே விட முடியாது.உனக்கு மனைவி இருக்காள்.உன் பிள்ளைகள் இருக்கு.நீ அதற்கே தகுதி இல்லாத நீயெல்லாம் ஏழு கேட்கா.இவனை ஆயுள் வரை தண்டிக்க வேண்டும்.இப்போது கனகா பிள்ளைகளுக்கு தாயும் இல்லை தந்தை இல்லை.அந்த குமுறல் ஏக்கம் விடாது.

அடMar 19, 2024 - 06:36:58 PM | Posted IP 162.1*****

காம கொடூரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory