» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்களவைத் தேர்தல்: டி.ஆர்.பாலு, ஓபிஎஸ், துரை வைகோ வேட்புமனு தாக்கல்!
திங்கள் 25, மார்ச் 2024 12:27:46 PM (IST)
மக்களவைத் தேர்தலில் போட்டியிட டி.ஆர்.பாலு, ஓ.பன்னீர்செல்வம், துரை வைகோ, உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20 முதல் 27 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களின் வேட்புமனுக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவரிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்திலும் போட்டியிட இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதேபோல், திருச்சியில் மதிமுக துரை வைகோ, வேலூரில் திமுக கதிர் ஆனந்த், கன்னியாகுமரியில் பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.