» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை!

வியாழன் 28, மார்ச் 2024 4:23:51 PM (IST)

நித்திரவிளை அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் திருமணமான 11 மாதத்தில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சரத் (30). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அஸ்வதி (26) கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 11 மாதம் ஆகிறது. நேற்று முன்தினம் மாலை உறவினர் ஒருவரின் குழந்தை பிறந்த நாள் விழாவிற்காக இருவரும் சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். 

பின்னர் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சரத் படுக்க செல்கிறேன் என கூறிவிட்டு தனியாக சென்று அறை கதவை பூட்டிவிட்டு படுத்து உள்ளார். சந்தேகம் அடைந்த அசுவதி இரவு 9 மணி அளவில் கதவின் இடைவெளி வழியாக பார்த்த போது, சரத் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.

உடனேஉறவினர்கள் உடனே உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து சரத்தை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். பின்னர் குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சரத் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது சம்பந்தமாக அஸ்வதி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory