» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆதார் அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, ஏப்ரல் 2024 11:35:48 AM (IST)
வாக்காளர் அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. மேற்படி தேர்தலின் போது வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்க்காணும் ஆவணங்களை அடையாள சான்றாக பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
1. வாக்காளர் அடையாள அட்டை
2. ஆதார் அட்டை
3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை
4. கணக்கு புத்தகங்கள் (வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)
5. மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)
6. ஓட்டுநர் உரிமம்
7. இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தல் வழங்கப்பட்டது)
8. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை
9. ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது)
10. இந்திய கடவுச்சீட்டு
11. ஓய்வூதிய ஆவணம் (புகைபடத்துடன் கூடியது)
12. அடையாள அட்டை (மத்திய/மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலார்களுக்கு வழங்கப்பட்டது)
13. அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற/சட்டமன்ற பேரவை/சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது)
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)
