» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் : டி.டி.வி. தினகரன் பேட்டி!!

புதன் 24, ஏப்ரல் 2024 3:46:30 PM (IST)



பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் உறுதியாக வெற்றிபெறும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.  

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சுவாமி தரிசனம் செய்து இரவு ராக்கால அபிஷேகத்திற்கு பால் வழங்கி விழாவில் கலந்து கொண்டு மூலவர் மற்றும் சண்முகரை வழிபட்டார். பின்னர் சூரசம்கார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தன்னை தலைவர் என போட்டுக்கொண்டால் தலைவராக முடியாது. கட்சியை அபகரித்து வைத்திருப்பவர்கள் தலைவராக முடியுமா?. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்று பலவீனமாகி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் துரோக புத்தியால் அ.தி.மு.க. வியாபார நிறுவனமாக செயல்படுகிறது. 

பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சி மீதான கோபத்தின் காரணமாகவும், தி.மு.க. திருந்தியிருக்கும் என்றும்தான் மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள். ஆனால் தி.மு.க. 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகம் முழுவதும் போதைப் பொருள் வியாபாரம் ஆளும் கட்சியினரின் உதவியுடன் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.வும் கள்ள உறவு வைத்துக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிடக்கூடாது என்று வேலை பார்த்தனர். 

வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை தி.மு.க.விற்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினர். தி.மு.க.விற்கு எதிராகவும், துரோகத்திற்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் இன்று துரோகம் செய்வதற்காகவே ஒரு கும்பலால் பயன்படுத்தப்படுகிறது. அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் கட்சி பா.ஜ.க. அல்ல. தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் உறுதியாக வெற்றிபெறும். வாக்கு சதவீதமும் அதிகமாக இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் 3-ம் இடத்திற்கு தள்ளப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா, மாநில அமைப்பு செயலாளர் பி.ஆர். மனோகரன், இளைஞர் பாசறை மாநிலச் செயலாளர் மணிகண்டன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர செயலாளர் முருகேசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory