» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!

திங்கள் 9, ஜூன் 2025 3:38:43 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (09.06.2025) நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 420 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. 

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், கிள்ளியூர் வட்டத்தைச் சார்ந்த ரமேஷ்குமார் என்பவரின் மகன் ஆர்.எஸ்.அபிஜித் என்பவர் மின்சாரம் தாக்கி கடந்த 31.01.2025 அன்று உயிரிழந்ததற்கு அன்னாரது தந்தை ரமேஷ்குமார் அவர்களிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினையும், விளவங்கோடு வட்டம், குழித்துறை சப்பாத்து பாலத்தில் இரண்டு மாணவர்களின் உயிரை காப்பற்றி உயிர் தியாகம் செய்தி பீட்டர் ஜாண்சன் என்பவரது வாரிசு சான்றிதழ் அன்னாரது மகனிடம் வழங்கினார்.

தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை செம்மொழி நாளாக அறிவித்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்திட ஆணையிட்டதை தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளையும், மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 13 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.1.14 இலட்சம் என மொத்தம் ரூ.14.82 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட நவீன சக்கர நாற்காலிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) குருசந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory