» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவனந்தபுரம் - நாகர்கோவில் இருப்பு பாதை திட்டத்தை சுசீந்திரம் வரை அமைக்க கோரிக்கை!
திங்கள் 9, ஜூன் 2025 4:17:53 PM (IST)
திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது இருப்பு பாதை திட்டத்தை அளூரிலிருந்து ஆசாரிபள்ளம் வழியாக சுசீந்திரம் வரை அமைக்க கோரிக்கை வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வேதுறை திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரை உள்ள 71 கி.மீ தூரத்தில் மூன்றாவது இருப்பு பாதை அமைக்கும் திட்டத்திற்கு இறுதி கட்ட இட ஆய்வுக்கு கடந்த மாதம் அறிவித்துள்ளது. இந்த இறுதிக்கட்ட ஆய்வுக்கு ஒரு கி.மீ க்கு இரண்டு லட்சம் வீதம் மொத்தம் 1.41 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 10 ரயில் நிலையங்கள், 78 கி.மீ தூரத்துக்கு இருப்பு பாதையும் உள்ளது. குமரி மாவட்டம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை நெருக்கடி நிறைந்த மாவட்டம் ஆகும். இவ்வாறு மக்கள் நெருக்கம் நிறைந்த இந்த மாவட்ட மக்களுக்கு 10 ரயில் நிலையங்கள் என்பது மிகவும் குறைவு ஆகும். வளர்ந்த மேற்குலக நாடுகள் உலகம் வெப்பமயமாதலை முன்னிட்டு பொது போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பொது போக்குவரத்து பல்வேறு சலுகைகள் கொடுத்து பொது போக்குவரத்தை ஊக்குவித்தும் வருகிறார்கள். கன்னியாகுமரிக்கு ரயில் வழித்தடம் அமைக்க 1956-57-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு செய்யப்பட்ட சர்வே 1951-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 8,26,380 மக்கள் தேவைக்கு என்று திட்டம் சர்வே செய்யப்பட்டது ஆகும். தற்போது உள்ள மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் ரயில் நிலையங்கள் மற்றும் கூடுதல் இருப்பு பாதைகள் மாவட்டத்தில் அமைத்தல் காலத்தின் கட்டாயம் ஆகும்.
அளூரிலிருந்து நாகர்கோவில் வழியாக செட்டிகுளத்துக்கு 24 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை சர்வே : குமரி மாவட்டத்தில் உள்ள அளுரிலிருந்து நாகர்கோவில் வழியாக நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க 2013-14 ம் ஆண்டு தொடக்க நிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு மீண்டும் 2016-17-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது.
இந்த வழித்தடம் ஆளுரிலிருந்து தொடங்கி ஆசாரிப்பள்ளம், கோணம், பொட்டல், பறக்கை வழியாக நாகர்கோவில் சந்திப்பு விட்டுவிட்டு அங்கிருந்து தேரூர், மருங்கூர், மைலாடி, அஞ்சுகிராமம் வழியாக செட்டிகுளம் செல்லுமாறு 24 கி.மீ தூரம் அமையும் என்று ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு ரேட் ஆப் ரிட்டன் குறைவாக இருக்கின்ற காரணத்தால் இந்த திட்டத்தை ரயில்வே வாரியத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரை மூன்றாவது இருப்பு பாதை திட்டத்தை வீராணி ஆளூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வரை உள்ள இருப்பு பாதை திட்டத்தை தற்போது உள்ள பார்வதிபுரம், நாகர்கோவில் டவுன் நிலையம் வழியாக அமைக்காமல் மாற்று பாதையில் ஆளுரிலிருந்து தொடங்கி ஆசாரிப்பள்ளம், கோணம், பொட்டல், பறக்கை வழியாக அமைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
தற்போது உள்ள பாதையான நாகர்கோவில் சந்திப்பில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக ஆளூர் வீரானி வரை செல்கின்ற பாதை 11 கி.மீ தூரம் கொண்டது ஆகும். இதே இந்த புதிய வழித்தடத்தில் பாதை அமைக்கும் போது சுமார் ஐந்து கி.மீ தூரம் அதிகரித்து 16 கி.மீ தூரம் வரை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அமைக்கும் போது ரயில்வே துறைக்கு வெறும் 5 கி.மீ தூரம் மட்டுமே கூடுதலாக அமைக்க வேண்டியது வரும் அதற்கான செலவும் ஆகும். இந்த மூன்றாவது இருப்பு பாதை திட்டத்தில் அமைக்கும் போது ஆளுரிலிருந்து தொடங்கி ஆசாரிப்பள்ளம், கோணம், பொட்டல், பறக்கை வழியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாவது இருப்பு பாதை அமைக்கும் திட்டத்தை ஆய்வு செய்யும் போது திருவனந்தபுரம் முதல் ஆளுர் வரை ஆய்வு செய்துவிட்டு பின்னர் இதற்கு முன்னர் ஆய்வு செய்த திட்டத்தில் உள்ள அறிக்கையை மேம்படுத்தி இந்த மூன்றாவது இருப்பு பாதை திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நாகர்கோவில் நகரத்தில் வடக்கு பக்கமாக தற்போதைய இருப்பு பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயங்கி வருகிறது. இந்த புதிய பாதை திட்டம் அமைக்கப்பட்டால் நாகர்கோவில் நகரத்தில் தெற்கு பாகமாக இந்த பாதை அமைத்து நகரத்தின் நான்கு பக்கமும் வட்டவடிவில் ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வரும்.
குமரி மாவட்டத்தில் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் பிற்காலத்தில் நாகர்கோவில் நகரத்தில் சென்னையில் இயங்குவது போன்ற புறநகர் மெமு ரயில்கள் வட்டவடிவில் சுற்றுப்பாதையில் (நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் டவுன், சுசீந்திரம், பார்வதிபுரம், வீராணி ஆளூர், ஆசாரிபள்ளம், கோணம் பறக்கை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் வழியாக) இயக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் ரயில்கள் இன்டர்சிட்டி, அனந்தபுரி, குருவாயூர், மதுரை – புகலூர் ஆகிய ரயில்கள் வள்ளியூர், ஆரல்வாய்மொழி,தோவாளை வழியாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் விட்டுவிட்டு பின்னர் கன்னியாகுமரி மார்க்கமாக சிறிது தூரம் பயணம் செய்து சுசீந்திரம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து வலது புறமாக திரும்பி பறக்கை, பொட்டல், கோணம், ஆசாரிபள்ளம் வழியாக சென்று ஆளூர் வீராணி ரயில் நிலையம் வழியாக திருவனந்தபுரம் நோக்கி பயணம் செய்யும். இவ்வாறு மறு மார்க்கமாகவும் இந்த ரயில்கள் இயக்கப்படும்.
புதிய ரயில் நிலையங்கள்: திருவனந்தபுரம் கோட்டத்துக்பட்ட திருசூர் ரயில் நிலையத்திற்கும் அடுத்த ரயில் நிலையமான பூங்குன்னம் ரயில் நிலையத்துக்கும் இடையே மிக குறைந்த தூரமாக இரண்டு கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. இதைப்போல் கேரளாவில் உள்ள அதிக ரயில் நிலையங்களில் இரண்டு ரயில் நிலையத்துக்கான தூரம் மூன்று முதல் ஐந்து கி.மீ தூரம் மட்டுமே உள்ளது.
இந்த மார்க்கத்தில் சுமார் 12 முதல் 15 கி.மீ தூரத்துக்கு புதிய பாதை அமைக்கப்பட்டால் ஆசாரிபள்ளம், கோணம் ஆகிய இடங்களில் இரண்டு புதிய ஹால்ட ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்படுவதால் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு ஐடிஐ, ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது மட்டுமல்லாமல் ஆசாரிபள்ளத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் போது மாவட்டத்திலிருந்து ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரிக்கு வரும் நோயாளிகள், பணிபுரிவோர், படிக்கும் மாணவ மாணவியர்கள் தினசரி வந்து செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
கிராசிங் ரயில் நிலையங்கள்: நமது கோரிக்கையின் படி இந்த புதிய இருப்பு பாதை அமைக்கும் போது சுசீந்திரம் மற்றும் ஆளுர் வீரானி ரயில் நிலையங்கள் கிராசிங் ரயில் நிலையமாக தரம் உயர்த்தப்படும். இது இந்த பகுதி வளர்ச்சிக்கு மேலும் உதவிகரமாக அமையும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரம்: பேருந்து நிலைய உதவி மேலாளர் சஸ்பெண்ட்!
திங்கள் 9, ஜூன் 2025 5:24:02 PM (IST)

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., த.வெ.கவில் ஐக்கியம் : வாழ்த்துக்கூறி வரவேற்ற விஜய்!!
திங்கள் 9, ஜூன் 2025 4:49:57 PM (IST)

மாணவிகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க உள்ளோம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, ஜூன் 2025 4:39:08 PM (IST)

பெண் கொலை வழக்கில் 4பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு
திங்கள் 9, ஜூன் 2025 4:13:05 PM (IST)

சேவை இல்லத்தில் மாணவிக்கு காவலாளி பாலியல் தொல்லை : அண்ணாமலை கண்டனம்!
திங்கள் 9, ஜூன் 2025 3:55:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 9, ஜூன் 2025 3:38:43 PM (IST)
