» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவிகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க உள்ளோம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, ஜூன் 2025 4:39:08 PM (IST)
சென்னையில் அரசு விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் குற்றச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலராலேயே அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளதை ஏற்க முடியவில்லை. விடுதி வார்டன் விடுப்பில் சென்றநிலையில் காவலாளி அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது. தைரியமாக மாணவி குற்றஞ்சாட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஆண்கள் ஈடுபடுவதை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னை சத்யா இல்லம் உள்ளிட்ட பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து இல்லங்களிலும் பாதுகாப்பிற்கு பெண் காவலர்கள் நியமிக்கப்படுவர்.தாம்பரம் அருகே அரசு விடுதியில் மாணவியிடம் காவலாளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரையடுத்து அரசு புதிய முடிவு எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரம்: பேருந்து நிலைய உதவி மேலாளர் சஸ்பெண்ட்!
திங்கள் 9, ஜூன் 2025 5:24:02 PM (IST)

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., த.வெ.கவில் ஐக்கியம் : வாழ்த்துக்கூறி வரவேற்ற விஜய்!!
திங்கள் 9, ஜூன் 2025 4:49:57 PM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் இருப்பு பாதை திட்டத்தை சுசீந்திரம் வரை அமைக்க கோரிக்கை!
திங்கள் 9, ஜூன் 2025 4:17:53 PM (IST)

பெண் கொலை வழக்கில் 4பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு
திங்கள் 9, ஜூன் 2025 4:13:05 PM (IST)

சேவை இல்லத்தில் மாணவிக்கு காவலாளி பாலியல் தொல்லை : அண்ணாமலை கண்டனம்!
திங்கள் 9, ஜூன் 2025 3:55:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 9, ஜூன் 2025 3:38:43 PM (IST)
