» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா? உயர்நீதிமன்றம் கேள்வி
புதன் 25, ஜூன் 2025 4:09:37 PM (IST)
சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா? என உயர்நீதிமன்ற மதுரை கிளைக் கேள்வி எழுப்பியது.
மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?" எனக் கேள்வி எழுப்பியது. அத்துடன் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இ.பி.எஸ். உத்தரவு
வியாழன் 26, ஜூன் 2025 12:54:37 PM (IST)

மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை: முதல்வர் ஸ்டாலின்
வியாழன் 26, ஜூன் 2025 12:42:54 PM (IST)

மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய 3 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்: அறநிலையத்துறை உத்தரவு!
வியாழன் 26, ஜூன் 2025 12:21:25 PM (IST)

எதிர்க்கட்சியினரை கொலை செய்யும் அளவுக்கு பதவி வெறி: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!!
வியாழன் 26, ஜூன் 2025 12:13:05 PM (IST)

போதைப் பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் விசாரணை!
வியாழன் 26, ஜூன் 2025 10:53:28 AM (IST)

பணம் வசூலித்த எஸ்.ஐ., 2 போலீசார் சஸ்பெண்ட் : பெண் போலீஸ் உள்பட 7 பேர் இடமாற்றம்!!
வியாழன் 26, ஜூன் 2025 9:01:06 AM (IST)
