» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜக நிர்வாகி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை
சனி 4, அக்டோபர் 2025 3:33:52 PM (IST)

கோவில்பட்டியில் பாஜக நிர்வாகி வீட்டிற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் ரோடி, இவர் பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்தார். தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை. இவரது மனைவி செளமியா, பாஜக வடக்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார்.
இந்நிலையில் தினேஷ் ரோடி இ.மெயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் அனுப்பியுள்ளார். அவரது வீட்டு பகுதியில் மூன்று ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்று மாலை 6 மணிக்குள் வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது
இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட வெடிகுண்டு கண்டறிதல், அகற்றல் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரவேல் தலைமையிலான போலீசார் தினேஷ் ரோடி வீடு, அருகில் உள்ள கார்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறைப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு
ஞாயிறு 12, அக்டோபர் 2025 7:38:56 PM (IST)

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி: தூத்துக்குடி போலி எஸ்ஐ உள்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 10:16:48 AM (IST)

நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என கருத வேண்டாம்: டிடிவி தினகரன் பேட்டி
சனி 11, அக்டோபர் 2025 5:44:12 PM (IST)

அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருது :மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சனி 11, அக்டோபர் 2025 4:28:28 PM (IST)

சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 11, அக்டோபர் 2025 4:20:34 PM (IST)

கரூர் சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை: 2-வது முறையாக புஸ்சி ஆனந்த் மனு தாக்கல்!
சனி 11, அக்டோபர் 2025 12:24:51 PM (IST)
