» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நகை பறிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:48:22 AM (IST)
நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகேயுள்ள ராமதாஸ் நகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆனந்தராஜ் (35). இவர், சென்னையில் வேலை செய்து வருகிறார். கடந்த 28.3.2024 அன்று, தனது உறவினர் வீட்டுக்கு ஊருக்கு வந்திருந்தபோது, அன்று இரவு மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, ஒரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், நகைப் பறிப்பில் ஈடுபட்டது, தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த சிவன்பாண்டி மகன் சந்தோஷ்குமார் (22), சக்திவேல் மகன் தினேஷ்குமார் (25), ஸ்ரீவைகுண்டம் வட்டம், சிவராமமங்கலம் மகாராஜன் மகன் சிவா (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம்-2இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) விஜய ராஜ்குமார், குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 7:53:00 AM (IST)

திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:29:20 PM (IST)

மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டி : தூத்துக்குடி கிரெசென்ட் பள்ளிக்கு தங்கப்பதக்கம்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 3:11:05 PM (IST)

2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும்: விஜய் பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:49:39 PM (IST)

பெங்களுரில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 750 கிலோ குட்கா பறிமுதல் : 2பேர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:22:21 PM (IST)


