» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நகை பறிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:48:22 AM (IST)

நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகேயுள்ள ராமதாஸ் நகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆனந்தராஜ் (35). இவர், சென்னையில் வேலை செய்து வருகிறார். கடந்த 28.3.2024 அன்று, தனது உறவினர் வீட்டுக்கு ஊருக்கு வந்திருந்தபோது, அன்று இரவு மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, ஒரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம். 

இதுகுறித்த புகாரின்பேரில், தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், நகைப் பறிப்பில் ஈடுபட்டது, தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த சிவன்பாண்டி மகன் சந்தோஷ்குமார் (22), சக்திவேல் மகன் தினேஷ்குமார் (25), ஸ்ரீவைகுண்டம் வட்டம், சிவராமமங்கலம் மகாராஜன் மகன் சிவா (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம்-2இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) விஜய ராஜ்குமார், குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory