» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பழனிசாமியின் தலைமையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: ஓபிஎஸ் திட்டவட்டம்

புதன் 24, டிசம்பர் 2025 11:37:52 AM (IST)

பழனிசாமியின் தலைமையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் கழக மாவட்ட செய​லா​ளர்​களு​டனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நடந்த​இக்கூட்​டத்​தில் ஓ.பன்​னீர்​செல்​வம் பேசி​ய​தாவது: எம்​ஜிஆர் அதி​முகவை தொண்​டர்​களுக்​காக உரு​வாக்கி அமோக வெற்றிபெற்று 3 முறை முதல்​வ​ராக பதவி வகித்​தார். அதன்​பிறகு கட்​சிப்​பொறுப்பை ஏற்ற ஜெயலலி​தா​வும் 30 ஆண்​டு​களாக அதிமுகவை கட்​டுக்​கோப்​பாக வழிநடத்தி யாராலும் வெல்ல முடி​யாத இயக்​க​மாக தொடர்ந்து முதல்​வ​ராக பதவி வகித்​தார்.

ஆனால் அதன்​பிறகு தொண்​டர்​கள் உள்​ளிட்ட கட்சி நிர்​வாகி​களை ஒருங்​கிணைக்க வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் ஒருங்​கிணைப்​பாளர், இணை ஒருங்​கிணைப்​பாளர்​கள் பதவி உரு​வாக்​கப்​பட்​டது. ஆனால் திடீரென தனக்​கென ஒரு ஆதர​வுக் கூட்​டத்தை உரு​வாக்​கி, பழனி​சாமி தலை​மை​யில் ஒற்​றைத் தலைமை இருந்​தால்​தான் வெற்றி பெற​முடி​யும் எனக் குரல் எழுப்​பி, போலி​யான பொதுக் குழு​வைக்​கூட்டி அதி​முகவை படு​பா​தாளத்​துக்கு பழனி​சாமி தள்​ளி​விட்​டார்.

அவருடைய கட்​டுப்​பாட்​டில் கட்சி சென்ற பிறகு கடந்த எம்​.பி. தேர்​தலில் 7 இடங்​களில் அதாவது 48 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் டெபாசிட்டை இழந்​தது. 14 எம்​.பி. தொகு​தி​களில் மூன்​றாடம் இடத்​துக்கு அதி​முக தள்​ளப்​பட்​டுள்​ளது. பழனி​சாமி வெற்றி பெறு​வார் என மாயையை உரு​வாக்கி விட்​டனர்.

தை பிறந்​தால் வழி பிறக்​கும். தற்​போது தொண்​டர்​கள் எங்கு செல்​வது என தெரி​யாமல் திக்​கு​முக்​காடிப் போய் உள்​ளனர். இங்கு பேசிய ராமச்​சந்​திரன், வைத்​திலிங்​கம் போன்​றோர் பழனி​சாமி அங்​கம் வகிக்​கும் கூட்​டணி வேண்​டாம் என்​றும், பழனி​சாமி​யின் தலை​மையை ஏற்க மாட்​டோம் என்​றும் எரிமலை​யாக வெடித்​து​விட்டு தங்​களது உள்​ளக் குமுறலை உணர்ச்சி பெருக்​குடன் தெரி​வித்து சென்​றுள்​ளனர். அவர்​களின் உணர்​வு​களை அப்​படியே நானும் வழிமொழிகிறேன். பழனிசாமிக்கு பாடம் புகட்டுவோம். மக்​கள் நம் மீது மிகுந்த அக்​கறை​யும், நம்​பிக்​கை​யும் வைத்​துள்​ளனர். இவ்​வாறு பேசி​னார்.

முன்​ன​தாக, குன்​னம் ராமச்​சந்​திரன்​பேசும்​போது 3 சீட்​டுக்​காக இபிஎஸ் அணி​யில் இடம்​பெறத் தேவை​யில்லை என்​றும் வைத்​திலிங்​கம் பேசும்​போது, அதி​முவை குரங்கு கையில் கிடைத்த பூ மாலை​யாக மாற்​றி​விட்​டார் பழனி​சாமி என்​றும்​ தெரி​வித்​த​தாக கூறப்​படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory