» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு: கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 18, ஜனவரி 2026 8:25:24 AM (IST)
பொங்கல் விடுமுறை எதிரொலியாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால், மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
பொங்கல் பண்டிகை காரணமாக ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், சில நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்று திரும்பினர். இதனால், மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது. ஆனால், பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியதால் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
சீலா மீன் கிலோ ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரையும், விளை மீன், ஊளி, பாறை ஆகிய ரக மீன்கள் ரூ. 500 முதல் ரூ. 700 வரையும், சூப்பர் நண்டு ரூ. 900 வரையும், வங்கனபாறை மீன் ரூ. 140 வரையும், கேரை, சூரை மீன்கள் ரூ. 200 வரையும் விற்பனையானது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகி நீதிபதி ஜோதிமணி பவளவிழா: மேலாளர் வாழ்த்து!
ஞாயிறு 18, ஜனவரி 2026 12:01:41 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்: அடுத்த மாதம் 17-ஆம் தேதி இறுதி பட்டியல்!!
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:34:05 AM (IST)

கல்லால் தாக்கி வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கொடூரக் கொலை: கஞ்சா போதை ஆசாமிகள் வெறிச்செயல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:26:09 AM (IST)

ஜனநாயகன் படம் வெற்றிகரமாக வெளிவரும்: ஜீவா பேட்டி
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:03:49 AM (IST)
_1768652448.jpg)
ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் யாராவது கேட்டார்களா? சீமான் விமர்சனம்!
சனி 17, ஜனவரி 2026 5:51:10 PM (IST)

ஆத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பெண் உள்பட 2 பேர் பலி!
சனி 17, ஜனவரி 2026 5:40:14 PM (IST)

