» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: சிறந்த நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஊக்கப்பரிசு

திங்கள் 9, மார்ச் 2026 8:43:18 PM (IST)



தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மின்னணுப் பரிவர்த்தனை வாயிலாக அதிக அளவில் பயணச்சீட்டுகளை வழங்கிய சிறந்த நடத்துநர்களுக்கு ஊக்கப்பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி-2026 மாதத்தில், மின்னணுப் பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்திப் பயணச்சீட்டுகளை வழங்கியதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் தலா இரண்டு சிறந்த நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட நடத்துநர்களுக்குத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நடராஜன், ஊக்கப்பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில் முதன்மை நிதி அலுவலர் முரளிதரன், திருநெல்வேலி பொது மேலாளர் சிவகுமார், தூத்துக்குடி பொது மேலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்து நடத்துநர்களைக் கௌரவித்தனர்.

மின்னணுப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு, மற்ற பணியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பேருந்துகளில் சில்லறைத் தட்டுப்பாடு குறைவதோடு, வெளிப்படையான பணப்பரிவர்த்தனை உறுதி செய்யப்படுவதாகப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory