» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்களிக்கும் வைபவம்: திருமண அழைப்பிதழ் பாணியில் தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு!

செவ்வாய் 24, மார்ச் 2026 3:46:32 PM (IST)



தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடியில் தொண்டு நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டுள்ள வினோதமான "அழைப்பிதழ்" பேனர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த "மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை" சார்பில் இந்த விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. வழக்கமான அரசு அறிவிப்புகளைப் போலன்றி, ஒரு இல்லத் திருமண விழா அழைப்பிதழ் எந்த வடிவில் இருக்குமோ, அதே பாணியில் இந்த பேனர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிகழும் மங்கலகரமான 2026ம் வருடம் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி (23.04.2026)" எனத் தொடங்கி, ஒரு சுப நிகழ்விற்கு அழைப்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் உங்கள் அருகாமையில் உள்ள வாக்குச் சாவடியில் "வாக்களிக்கும் வைபவம்" நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சுற்றமும் நட்பும் சூழ, அடையாள அட்டையுடன் வந்து வாக்கினைப் பதிவு செய்யும்படி அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழின் இறுதியில் "வாக்களிக்கும் விழாவில் அன்பளிப்பு பெறுவதும் அளிப்பதும் பெரும் குற்றமாகும்" என்ற வாசகம் மூலம் தேர்தல் நேர்மையையும் அந்த அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு, வாக்காளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, சமூக வலைதளங்களிலும் பரவி பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory