» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுற்றுச்சுழல் பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி

புதன் 1, ஏப்ரல் 2026 4:01:03 PM (IST)



தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்று திமுக வேட்பாளர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், "தமிழக முதலமைச்சர் கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களால், தமிழகம் இன்று இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம் சிப்காட் வளாகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சிறப்புப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட 15, 16, 17, 18 ஆகிய 4 வார்டுகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்.

நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் பல்வேறு இணைப்புச் சாலைகள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் எக்காரணம் கொண்டும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான தொழிற்சாலைகளே கொண்டு வரப்படும் என அவர் உறுதி அளித்தார்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வி. சண்முகம், வடக்கு மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கரும்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் விமல் வெங்காலியார் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory