» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போர்சூழலில் தவித்து வந்த மீனவர்களை மீட்ட மத்திய அரசு - பிரதமர் மோடிக்கு நன்றி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:53:01 AM (IST)

பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சியால் 345 இந்திய மீனவர்கள் ஈரானிலிருந்து பாதுகாப்பாக சென்னை திரும்பியடைந்தனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; ஈரான், பஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் மீன்பிடித் தொழிலுக்காக சென்று, தற்போதைய போர்சூழலில் தவித்து வந்த 327 இந்திய தமிழ் மீனவர்கள் உட்பட 345 இதர இந்திய மீனவர்களை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீட்டு தமிழகம் கொண்டுவந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போர், ஈரான்-இஸ்ரேல் போர் என எந்தவொரு பேரிடர் வந்தாலும் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் பத்திரமாக மீட்டு என்றும் காத்து வரும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதற்கு என்றும் உறுதுணையாக திகழும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் எத்தனை நன்றிகள் கூறினாலும் தகும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீடியோ காலில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த சின்னத்திரை நடிகை திடீர் தற்கொலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:26:37 PM (IST)

காவல் துறையின் அனுமதி உத்தரவில் அதிருப்தி: தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:42:19 AM (IST)

தென் தமிழகத்தின் நீண்டகாலக் கனவு: கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் நனவாகுமா?
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:38:39 AM (IST)

நாகர்கோவிலில் புதிய இரட்டை ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தது: பயணிகள் மகிழ்ச்சி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:08:39 AM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

