» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா : மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராக நியமனம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:33:05 PM (IST)
நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், வரும் சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து துணை மேயர் மேரி பிரின்சி லதா இன்று பொறுப்பு மேயராக நியமனம் செய்யப்பட்டார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக மகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தேர்தல் விதிகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அதன்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.மேயர் பதவி காலியானதைத் தொடர்ந்து, மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி துணை மேயராகப் பணியாற்றி வந்த மேரி பிரின்சி லதா, இன்று முதல் மாநகராட்சியின் பொறுப்பு மேயராகப் பணிகளைத் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் அவர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9பேருக்கும் இரட்டை மரண தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 6, ஏப்ரல் 2026 6:00:17 PM (IST)

கன்னியாகுமரியில் ஏப். 15ல் பிரதமருடன் பிரசாரம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:39:23 PM (IST)

நான் ஆட்சிக்கு வந்தால் மெரினா நினைவிடங்களை அகற்றுவேன்: சீமான் ஆவேசப் பேச்சு
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:25:10 PM (IST)

தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு : களம் காணும் முக்கியத் தலைவர்கள்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:10:39 PM (IST)

காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை: மார்த்தாண்டம் அருகே சோகம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:22:09 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு மூதாட்டி கொலை வழக்கு ஜாமீன் ரத்து!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:43:23 PM (IST)

