» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் விபத்தில் வாலிபர் பலி: வெளிநாட்டில் இருந்து சகோதரர் திருமணத்திற்கு வந்தபோது சோகம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:23:50 AM (IST)
தக்கலை அருகே சகோதரர் திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள அரண்மனை சாலை, இலங் கத்துவிளையை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சிபு (31), சீனு (30) என இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் மூத்த மகன் சிபுவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. இதையொட்டி - சகோதர்கள் இருவரும் வெளிநாட்டில் இருந்து விடுமுறை - யில் சொந்த ஊருக்கு வந்தனர்
இந்தநிலையில் நேற்று முன் தினம் சீனு தனது நண்பரை பார்பதற்காக குமாரபுரத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கிறிஸ்தவ ஆலயத்தின் அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் சீனு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாகபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து சகோதரர் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - கச்சகுடா இடையே புதிய வாராந்திர ரயில் சேவை நாளை தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி !
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:36:54 PM (IST)

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய், சாத்தூரில் நயினார் நாகேந்திரன் வேட்புமனுக்கள் ஏற்பு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:48:16 AM (IST)

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் பரப்புரை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:33:10 AM (IST)

தேர்தல் விதிமீறல்கள் குறித்து எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:28:09 AM (IST)

ராஜபாளையம் தொகுதி : வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:46:10 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9பேருக்கும் இரட்டை மரண தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 6, ஏப்ரல் 2026 6:00:17 PM (IST)

