» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு: 5 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது!
புதன் 22, ஏப்ரல் 2026 10:57:08 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகுந்த 5½ அடி நீள நல்லபாம்பைத் தீயணைப்புத் துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று திடீரென ஒரு பெரிய பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மேற்கொண்ட தீவிரத் தேடுதல் வேட்டையில், சுமார் 5½ அடி நீளம் கொண்ட விஷத்தன்மை கொண்ட நல்லபாம்பு பிடிபட்டது.
பிடிபட்ட பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகப் பிடித்துச் சென்று தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் விடுவித்தனர். "கோடை வெயில் காரணமாகப் பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி குடியிருப்பு மற்றும் அலுவலகப் பகுதிகளுக்குள் நுழையக்கூடும். பொதுமக்கள் பாம்புகளைக் கண்டால் தாமாகப் பிடிக்க முயலாமல் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்," என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாக்குப்பதிவு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், மாவட்டத்தின் மிக முக்கிய அலுவலகத்தில் பாம்பு புகுந்த சம்பவம் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் தாமதம்: இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படுகிறது!
புதன் 22, ஏப்ரல் 2026 5:44:03 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எதிரொலி : கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

சென்னை - தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.17,527 ஆக உயர்வு: பயணிகள் கடும் அதிர்ச்சி!
புதன் 22, ஏப்ரல் 2026 5:13:19 PM (IST)

மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கு: சி.பி.ஐ. பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதன் 22, ஏப்ரல் 2026 4:55:41 PM (IST)

காமராஜர் குறித்து அவதூறு: யூடியூபர் முத்தார் மீது நீதிமன்றத்தில் வழக்கு - விசாரணைக்கு ஏற்பு
புதன் 22, ஏப்ரல் 2026 4:27:39 PM (IST)

பாராசிட்டமால் மாத்திரை உயிருக்கே ஆபத்தாகலாம் : பொது சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!
புதன் 22, ஏப்ரல் 2026 4:07:06 PM (IST)

