» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் : திமுக, அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு!
புதன் 22, ஏப்ரல் 2026 11:16:32 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சுமார் 3.20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கத் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக வட்டச் செயலாளர் உட்பட 4 பேர் கைது
தூத்துக்குடி நகர் பகுதியில் வருமான வரித்துறை அலுவலர் சங்கர் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாக்காளர்களுக்குக் கொடுக்கப் பணம் வைத்திருந்ததாக அதிமுக வட்டச் செயலாளர் ராமச்சந்திரன் (40) மற்றும் ரமேஷ் (24), முருகன் (26), சுப்ரமணியன் (30) ஆகிய நான்கு பேரிடமிருந்து ரூ. 1,17,500 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாகத் தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக கிளைச் செயலாளர் தப்பியோட்டம்
கயத்தாறு அருகேயுள்ள பன்னீர்குளம் கிராமத்தில் இன்று அதிகாலை வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்படுவதாகப் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உள்ளாட்சி தணிக்கை நீதித்துறை ஆய்வாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்தபோது, அதிகாரிகளைக் கண்ட நபர் ஒருவர் தான் வைத்திருந்த 50,000 ரூபாயைக் கீழே போட்டுவிட்டுத் தப்பியோடினார். விசாரணையில் அவர் பன்னீர்குளம் திமுக கிளைச் செயலாளர் செல்வகுமார் (45) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை - முனியசாமிபுரம் பகுதிகளில் பறிமுதல்
புதுக்கோட்டை: அல்லிக்குளம் ரோட்டில் ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர் பத்மாவதி தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், இசக்கி நாதன் என்பவரிடமிருந்து ரூ. 40,000-மும், வைத்தியலிங்கம் என்பவரிடமிருந்து ரூ. 19,240-மும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முனியசாமிபுரம்: கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் பொன்மாரி தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், மாரியப்பன் என்பவரிடம் ரூ. 48,700 மற்றும் மணிகண்டன் என்பவரிடம் ரூ. 45,200 என மொத்தம் ரூ. 93,900 பறிமுதல் செய்யப்பட்டது.
கண்காணிப்பு தீவிரம்
தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தங்களது சோதனையை இரட்டிப்பாக்கியுள்ளனர். "தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் தாமதம்: இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படுகிறது!
புதன் 22, ஏப்ரல் 2026 5:44:03 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எதிரொலி : கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

சென்னை - தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.17,527 ஆக உயர்வு: பயணிகள் கடும் அதிர்ச்சி!
புதன் 22, ஏப்ரல் 2026 5:13:19 PM (IST)

மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கு: சி.பி.ஐ. பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதன் 22, ஏப்ரல் 2026 4:55:41 PM (IST)

காமராஜர் குறித்து அவதூறு: யூடியூபர் முத்தார் மீது நீதிமன்றத்தில் வழக்கு - விசாரணைக்கு ஏற்பு
புதன் 22, ஏப்ரல் 2026 4:27:39 PM (IST)

பாராசிட்டமால் மாத்திரை உயிருக்கே ஆபத்தாகலாம் : பொது சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!
புதன் 22, ஏப்ரல் 2026 4:07:06 PM (IST)

