» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
செவ்வாய் 23, ஜூன் 2026 7:37:24 AM (IST)
நாசரேத்தில் ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரைச் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள வாழையடி முதல் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (29). தொழிலாளியான இவர், இரண்டு தினங்களுக்கு முன்பு நாசரேத் பேருந்து நிலையத்தில் மது போதையில் சுற்றித் திரிந்துள்ளார்.
பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் பயணித்த 17 வயது சிறுமிக்கு வெங்கடேஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு உஷாரான பேருந்து பயணிகள், வெங்கடேஷை மடக்கிப் பிடித்து நாசரேத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சகாய சாந்தி தீவிர விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெங்கடேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவையை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர் : உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:09:05 PM (IST)

சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாமே: முதல்வர் விஜய் கேள்வி!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:01:39 PM (IST)

திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு அறிவிப்பு : ஜூலை 7-க்குள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 10:50:50 AM (IST)

குழந்தைகளின் சமூக வலைத்தளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டம்: முதலமைச்சருக்குக் கோவில்பட்டி எழுத்தாளர் மனு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:25:47 AM (IST)

கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா: பன்னிரு திருமுறை விண்ணப்பம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 7:29:59 AM (IST)

மாணவர்களுக்குக் காலை உணவுக்குப் பதில் பிஸ்கட் விநியோகம்: 3 பேர் பணிநீக்கம்!
திங்கள் 22, ஜூன் 2026 8:17:10 PM (IST)


