» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஜூலை 1ல் அமல்!

வெள்ளி 26, ஜூன் 2026 10:33:44 AM (IST)

தமிழக அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 2031ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ், காப்பீட்டு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் பணமில்லா முறையில் (Cashless) 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவ உதவி பெறலாம். மேலும், 46 வகையான தீவிர நோய்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை வசதி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாகக் கார் பஸ் நிதி மூலம் 15 லட்சம் ரூபாய் வரை உதவி கிடைப்பதால், அவர்கள் மொத்தம் 27 லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி பெற முடியும்.

புதிய காப்பீட்டுத் திட்டத்தில் 2,992 சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக 1,535 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, குறைந்த ஊதியம் பெறும் இத்தகைய ஊழியர்களுக்கான பிரீமியத் தொகையை அரசே ஏற்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory