» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேருந்துகள் நிற்பதே இல்லை; எதற்கு நிழற்குடை? கனிமொழி எம்பியுடன் பெண்கள் வாக்குவாதம்!

வெள்ளி 26, ஜூன் 2026 11:05:20 AM (IST)

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் புதிய பேருந்து நிழற்குடையைத் திறந்து வைக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், அப்பகுதியில் பேருந்துகள் நிற்பதில்லை என்று கூறி உள்ளூர் பெண்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஓடக்கரை பகுதியில் புதிதாகப் பேருந்து நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, புதிய பேருந்து நிழற்குடையைத் திறந்து வைத்தார்.

திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அங்குத் திரண்ட அப்பகுதி பெண்கள், கனிமொழியை முற்றுகையிட்டுப் பேசினர். "இந்த ஓடக்கரை பகுதியில் அரசுப் பேருந்துகள் எவையுமே நிற்பதே இல்லை. பேருந்துகள் நிறுத்தப்படாத இந்த இடத்தில் எதற்காகப் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது?" என அவர்கள் அதிரடியாகக் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த கனிமொழி, "திமுக ஆட்சியாக இருந்தால் பேருந்துகள் கண்டிப்பாக இங்கு நின்று சென்றிருக்கும்" என்று கூறினார். கனிமொழியின் இந்த பதிலால் மேலும் ஆத்திரமடைந்த பெண்கள், திமுக ஆட்சியிலும் கூட இந்த இடத்தில் பேருந்துகள் நிற்கவில்லை என்று கூறி அவருடன் காரசாரமாக வாதிட்டனர். பெண்களின் இந்த திடீர் கேள்விகளாலும் தொடர் வாக்குவாதத்தாலும் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory