» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக பெண் நிர்வாகியிடம் செல்போன் பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

சனி 27, ஜூன் 2026 10:42:16 AM (IST)

திருச்செந்தூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயற்குழு பெண் உறுப்பினரிடம் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி இராஜாமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகள் ரோகிணி (35). இவர் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பில் இருந்து வருகிறார். நேற்று ஆறுமுகநேரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையின் அருகே நின்றுகொண்டு, தனது தம்பியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக அவரது கையில் இருந்த சாம்சங் செல்போனைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த ரோகிணியின் தம்பி, உடனடியாக அந்த நபரைத் துரத்திச் சென்றார். எனினும், அந்த நபர் அப்பகுதியில் உள்ள தெருக்களுக்குள் ஓடி மறைந்ததால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

பறிபோன செல்போனின் மதிப்பு சுமார் ரூ.10,000 என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ரோகிணி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory