» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் தீர்ப்பை திமுகவிற்கு மதிக்கத் தெரியவில்லை : நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!

ஞாயிறு 19, ஜூலை 2026 10:24:28 AM (IST)

MariaWilsonNellai.jpg

தவெக ஆட்சி கவிழும் என்று கூறும் திமுகவிற்கு மக்கள் தீர்ப்பை மதிக்கத் தெரியவில்லை என்று  நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, இராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, நிதி அமைச்சரும் திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரிய வில்சன், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார்.

அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாகவதாவது:  தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் முறைப்படி தாக்கல் செய்யப்படும். தமிழக வெற்றிக் கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையால் பேசி வருகிறார். உண்மை நிலை இன்னும் அவருக்குப் புரியவில்லை; அதனால்தான் அவர் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்.

மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பது பற்றி அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தெரியவில்லை, திமுக தலைமைக்கும் தெரியவில்லை. ஜனநாயகத்தில் மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் அனைவரும் தலைவணங்க வேண்டும். தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் ஊழலுக்கு எதிராக எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளைத் தமிழக மக்கள் 100 சதவீதம் முழுமையாக வரவேற்கின்றனர். இவ்வாறு மரிய வில்சன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory