» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!

சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)

MaatuvandiJL18.jpg

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராம ஸ்ரீ காளியம்மன் கோயில் ஆனி மாதக் கொடை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 

இப்போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 52 ஜோடி மாடுகள் பங்கேற்றன. 

மீனாட்சிபுரம் முதல் குளத்தூர் வரையிலான சாலையில் பந்தயம் நடைபெற்றது. சின்னமாட்டுப் பிரிவிற்குப் போய் வர 6 மைல் தூரமும், பூஞ்சிட்டுப் பிரிவிற்குப் போய் வர 5 மைல் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

PrizeMaatuvandiJL18.jpg

போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பில் பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்குகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்னமாரிமுத்து, தெற்கு ஒன்றியச் செயலாளர் இம்மானுவேல், புதூர் பேரூர் கழகப் பொறுப்பாளர் வெற்றிவேலன், கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory