» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாதப் பிறப்பு தீர்த்தவாரி: சிறப்பு அபிஷேகங்கள்!
சனி 18, ஜூலை 2026 8:52:19 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டுச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாதத் தொடக்கத்தையொட்டி கோயிலின் நடை அதிகாலை 5:00 மணிக்குத் திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றன. காலை 10:00 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் இதர காலப் பூஜைகளும் வழக்கம்போல் நடத்தப்பட்டன.
பூஜைகளின் தொடர்ச்சியாகச் சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்குப் பல்வேறு வாசனைத் திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் பாரம்பரியத் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. மாதப் பிறப்பையொட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடி, வரிசையில் காத்திருந்து வழிபாடு மேற்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 18, ஜூலை 2026 11:39:35 AM (IST)

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஞானசவுந்தரி த.வெ.க-விலிருந்து நீக்கம்!
சனி 18, ஜூலை 2026 11:29:22 AM (IST)

தமிழக வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்
சனி 18, ஜூலை 2026 10:42:22 AM (IST)

இ.பி.எஸ்., தலைமையிலான அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது: எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு!
சனி 18, ஜூலை 2026 10:20:15 AM (IST)

பனிமய மாதா ஆலயத் திருவிழா முன்னேற்பாடுகள் : அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 8:44:12 AM (IST)


